தமிழக உறவு பாதிககாத வகையில் அணை கட்டுவோம்-கேரள முதல்வர் உம்மன் சாண்டி
திருவனந்தபுரம் : முல்லைப் பெரியாறுக்கு நடுவே, புதிய அணை கட்டும் விஷயத்தில் தமிழகத்துடனான உறவு பாதிக்கப்படாத வகையில் செயல்படுவோம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. ஆனால் புதிய அணை கட்டுவதை தமிழகம் அனுமதிக்காது என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் கருத் குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில்,
முல்லைப் பெரியாறு அணை மூலம், தமிழகத்துக்கு தண்ணீர் தேவை. இதில் மாறுபட்ட கருத்து இல்லை. அதே நேரத்தில் கேரள மக்களின் பாதுகாப்பு மிக அவசியம்.
புதிய அணை கட்டும் விஷயத்தில், தமிழகத்துடன் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்படும். இந்த விஷயத்தில் தமிழகத்துடனான உறவு பாதிக்கப்படாத வகையில் செயல்படுவோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications