Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு சிபிஐ இயக்குநர் ஆஜராகி வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

CBI Director AP Singh
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு இன்று சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான அனைத்து விவரங்களையும் விசாரணை நிலவரத்தையும் அவர் குழுவிடம் தெரிவித்தார்.

இதையடுத்து மேலும் சிலருக்கும் விசாரணைக்காக வருமாறு கூறி சம்மன் அனுப்ப நாடாளுமன்றக் கூட்டுக் குழு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக 2004 முதல் 2007 வரை தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனுக்கு முக்கியமாக சம்மன் அனுப்பப்டும் என்று தெரிகிறது.

அதேபோல 1998 முதல் 2008 வரை தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்தவர்களையும் நேரில் அழைத்து விசாரிக்க கூட்டுக் குழு தீர்மானித்துள்ளதாகவும் தெரிகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக இதுவரை முன்னாள் அமைச்சர் ராசா, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது தயாநிதி மாறனின் பெயர் கடுமையாக அடிபட்டு வருகிறது. விரைவில் அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சிபிஐ இயக்குநர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை கூட்டுக் குழு எடுக்கும் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+