மத்திய அமைச்சரவை மாற்றம் திடீர் ஒத்திவைப்பு

ஊழல் எதிர்ப்பு இயக்கங்களின் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அதற்கு முக்கியக் கவனம் செலுத்த பிரதமர் தீர்மானித்திருப்பதாகவும், எனவே அமைச்சரவை மாற்றத்தினை தற்போதைக்கு அவர் ஒத்திவைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தயாநிதி மாறன் மட்டும் விரைவில் மாற்றப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து யோசிப்பேன் என்று பிரதமர் கூறியிருந்தார். ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு மேற்கு வங்க முதல்வராகி விட்டதால் அந்த இடம் காலியாக உள்ளது. மேலும் தயாநிதி மாறன் மீது அடுக்கடுக்காக ஊழல் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் அமைச்சரவை மாற்றத்தை ஒரு சில நாட்களில் பிரதமர் மேற்கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான கட்டியமாக அமைச்சர்களின் சொத்து விவரங்களை வெளியிடுமாறு பிரதமர் உத்தரவிட்டார். மேலும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு நடத்தினார்.
இந்த நிலையில், அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் சற்று ஒத்திவைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஊழல் எதிர்ப்பு இயக்கப் போராட்டங்கள் வலுத்து வருவதால், அதற்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையிலும், பிரச்சினைகளைத் தீர்த்த பின்னர் அமைச்சரவை மாற்றத்தை செய்யலாம் என்ற எண்ணத்திலும் பிரதமர் இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் தயாநிதி மாறன் மட்டும் விரைவி்ல் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தயாநிதி மாறன் மீதான சிபிஐயின் கரம் இறுக ஆரம்பித்துள்ளது. அவருக்கு எதிராக சிவசங்கரன் கொடுத்துள்ள வலுவான வாக்குமூலத்தை வைத்து அவர் மீது வழக்கு தொடர சிபிஐ தயாராக உள்ளது. இதற்கான அனுமதியை பிரதமரிடமிருந்து அது எதிர்நோக்கியுள்ளது. இந்த விவகாரத்தை நீண்ட காலத்திற்கு கிடப்பில் போட முடியாத இக்கட்டான நிலையில் பிரதமர் இருக்கிறார். எனவே விரைவில் அதற்கான அனுமதியை பிரதமர் கொடுக்கக் கூடும். அப்படிக் கொடுப்பதற்கு முன்பே தயாநிதி மாறனை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் அறிவுறுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனேகமாக ஜூலை மாதத்திற்குப் பின்னரே அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
வெளிநாடுகளுக்குப் போக தடை
முன்னதாக மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளார்.
நேற்று முன்தினம்தான் மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்து விவரம், தங்களது உறவினர்களின் சொத்து விவரம் உள்ளிட்டவற்றை தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார் பிரதமர்.
இந்த நிலையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அமைச்சர்களுக்கு பல்வேறு உதத்ரவுகளையும் அவர் அதிரடியாக பிறப்பித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு டூர் போகக் கூடாது என்பது அதில் முக்கியமான ஒன்றாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications