அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி
Subscribe to Oneindia Tamil
பாலசோர்: ஆணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்த பிருத்வி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக ஏவி சோதனை செய்து பார்க்கப்பட்டது.
ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை தளத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவி சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்தியாவிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட பிருத்வி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது. சோதனை முழு வெற்றி அடைந்தது என்றனர்.
ஏற்கனவே பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications