மீண்டும் ஐ.நா. தலைவராக பான் கி மூனுக்கு இலங்கை ஆதரவு
Subscribe to Oneindia Tamil

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானதையடுத்து இலங்கை அரசுக்கும் ஐநா சபைக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
அதே நேரத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஐ.நா. போதிய நடவடிக்கைகளை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் புகார் உள்ளது.
இந் நிலையில் பான் கி மூனின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. அவர் இரண்டாவது முறையாக அந்தப் பதவிக்குப் போட்டியிட விரும்புகிறார். அவருக்கு பல்வேறு நாடுகள், குறிப்பாக ஆசிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆசிய நாடுகளுடன் இணைந்து பான் கி மூனுக்கு இலங்கையும் ஆதரவு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications