தமிழுக்கு முதலிடம்-ரயில்வே போலீசாருக்கு டி.ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
மதுரை: நீதி மன்றத்திற்கு அனுப்பப்படும் முதல் தகவல் அறிக்கை முதல் குற்றப் பத்திரிகை தாக்கல் வரை, அனைத்தும், தமிழில் இருக்க வேண்டும் என, ரயில்வே போலீசாருக்கு டி.ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மதுரை ரயில்வே நிலையத்தில் ரயில்வே டி.ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் திடீர் ஆய்வு செய்தார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நீதி மன்றத்திற்கு அனுப்பப்படும் முதல் தகவல் அறிக்கை முதல், குற்றப் பத்திரிகை தாக்கல் வரை, அனைத்தும், சட்டப்படி தமிழில் இருக்க வேண்டும். அனைத்து ஏட்டுகளும், கண்டிப்பாக எப்.ஐ.ஆர். பதிய வேண்டும்.
தமிழகத்தில் ரயிலில் நடக்கும் குற்றங்களால் பாதிக்கப்பட்டோர், எந்த ரயில்வே நிலையத்திலும் புகார் தெரிவிக்கலாம். வழக்கு பதிவு செய்ய மறுக்கும் போலீசார் மீது, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications