மத்திய நிர்வாக தீர்ப்பாய உறுப்பினராக நரேஷ் குப்தா நியமனம்: மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை மத்திய நிர்வாக தீர்ப்பாய உறுப்பினராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தவர் நரேஷ் குப்தா. பல ஆண்டுகள் பணிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் யாராலும் அவரை மறக்க முடியாது.
நரேஷ் குப்தா என்றாலே நேர்மையான, கண்டிப்பான, எளிமையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர். ஆள் ஒல்லியாக இருந்தாலும், எப்பொழுதும் 'கில்லியாக' காணப்படுபவர்.
அவரை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் நிர்வாக உறுப்பினராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பாட்னாவில் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் தென் மாநிலங்களில் காலி இடம் ஏற்படவிருப்பதால் அவர் இங்கு வந்து பணியாற்றக்கூடும் என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications