இலங்கையில் 'பயணம்' தொடங்கும் அப்பல்லோ டயர்ஸ்!

இலங்கையின் ஐடியல் வீல்ஸ் அண்ட் டயர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பயணிகள் வாகனங்களுக்கான டயர்களைத் தயாரிக்கவிருக்கிறது அப்பல்லோ டயர்ஸின் சர்வதேச விற்பனைப் பிரிவுத் தலைவர் ராஜேஷ் குமார் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
ஆரம்பத்தில் பயணிகள் வாகனங்களுக்கான டயர்களை மட்டும் இலங்கையில் உற்பத்தி செய்வதென்றும், பின்னர் அனைத்து வகை டயர்களையும் உற்பத்தி செய்வதென்றும் அப்பல்லோ டயர்ஸ் முடிவு செய்துள்ளது.
இலங்கையில் ஆண்டுக்கு 1.3 மில்லியன் டயர்கள் விற்பனையாகின்றன. இவற்றில் சியட் நிறுவனம் மட்டுமே 4.5 லட்சம் டயர்களை விற்கிறது. மீதி இறக்குமதி செய்யப்படுபவையே. எனவே இந்த இறக்குமதியை குறைக்க அப்பல்லோவின் வரவு இலங்கைக்கு உதவக் கூடும்.
அப்பல்லோ கூட்டு சேரும் ஐடியல் வீல்ஸ் அண்ட் டயர்ஸின் துணைத் தலைவர், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அரவிந்த டி சில்வா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications