சொத்துக்குவிப்பு வழக்கில் நயினார் நாகேந்திரனுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்
நெல்லை: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
நெல்லை கோர்ட்டில் தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழில் துறை, மின்துறை, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். தற்போது நெல்லை தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக நயினார் நாகேந்திரன் சொத்து குவித்தது குறித்து நெல்லை விஜிலன்ஸ் போலீசார் கடந்த 2006ம்ஆண்டு விசாரணை நடத்தினர்.
வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 9 லட்சத்து 97 ஆயிரத்து 97 ரூபாய்க்கு தங்கநகைகள், நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களை நயினார் நாகேந்திரன் வாங்கியது விஜிலன்ஸ் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன், அவர் மனைவி சந்திரா, மைத்துனர்கள் வள்ளிக்கண்ணு, சுப்பிரமணியன், நடராஜன், நவராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக 145 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நெல்லை சி.ஜே.எம். கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை நெல்லை சி.ஜே.எம். கோர்ட்டில் நடந்தது. நயினார் நாகேந்திரன் உட்பட ஆறு பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையை ஜூலை 6ம்தேதிக்கு நீதிபதி நசீர்அகமது ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications