திமுகவிலிருந்து தாவிய அசோகனுக்கு டெல்லி சிறப்பு பிரநிதி பதவி
கரூர்: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரநிதியாக திருவாரூர் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகனை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
கடந்த 2006 ம் ஆண்டு திமுகவில் சட்ட சபை தேர்தலில் திமுகவில் சீட் கிடைக்காததாதல் அக் கட்சிக்கு குட்பை சொல்லிவி்ட்டு அதிமுகவில் இணைந்தவர் அசோகன்.
அதிமுகவில் அப்போது, அவருக்கு தலைமைக் கழக பேச்சாளர் பதவி மட்டுமே கிடைத்தது. கடந்த 6 வருடமாகவே இப் பதவியில் மட்டுமே அமைதியாக இருந்து கட்சிப் பணியாறி வந்தார்.
நடைபெற்று முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் இவருக்கு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அதை மனதில் கொள்ளாமல் தேர்தல் பணியாற்றினார் அசோகன்.
இந்த நிலையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரநிதியாக அசோகனை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் அரசு சார்பில் மத்திய அரசை தொடர்பு கொள்ள டெல்லி பிரநிதி ஒருவரை மாநில அரசு நியமிப்பது வழக்கம்.
மிகவும் உயர்ந்த பதவியான இந்த பதவியை திமுகவில் இருந்து அதிமுகவிற்கு வந்த அசோகனுக்கு வழங்கியதன் மூலம் திமுகவில் இருந்து அதிமுகவிற்கு வருபவர்களுக்கு உரிய முக்கியத்துவமும், மரியாதையும், உயர்ந்த பதவியும் வழங்கப்படும் என இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா சிக்னல் கொடுத்துள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அசோகனைத் தொடர்ந்து திமுகவில் இருந்து மேலும் பல முக்கிய நிர்வாகிகள் விலகி வரக் கூடும் என்றும் அதிமுகவினர் மத்தியில் பேச்சு கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications