திமுகவிலிருந்து தாவிய அசோகனுக்கு டெல்லி சிறப்பு பிரநிதி பதவி
கரூர்: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரநிதியாக திருவாரூர் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகனை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
கடந்த 2006 ம் ஆண்டு திமுகவில் சட்ட சபை தேர்தலில் திமுகவில் சீட் கிடைக்காததாதல் அக் கட்சிக்கு குட்பை சொல்லிவி்ட்டு அதிமுகவில் இணைந்தவர் அசோகன்.
அதிமுகவில் அப்போது, அவருக்கு தலைமைக் கழக பேச்சாளர் பதவி மட்டுமே கிடைத்தது. கடந்த 6 வருடமாகவே இப் பதவியில் மட்டுமே அமைதியாக இருந்து கட்சிப் பணியாறி வந்தார்.
நடைபெற்று முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் இவருக்கு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அதை மனதில் கொள்ளாமல் தேர்தல் பணியாற்றினார் அசோகன்.
இந்த நிலையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரநிதியாக அசோகனை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் அரசு சார்பில் மத்திய அரசை தொடர்பு கொள்ள டெல்லி பிரநிதி ஒருவரை மாநில அரசு நியமிப்பது வழக்கம்.
மிகவும் உயர்ந்த பதவியான இந்த பதவியை திமுகவில் இருந்து அதிமுகவிற்கு வந்த அசோகனுக்கு வழங்கியதன் மூலம் திமுகவில் இருந்து அதிமுகவிற்கு வருபவர்களுக்கு உரிய முக்கியத்துவமும், மரியாதையும், உயர்ந்த பதவியும் வழங்கப்படும் என இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா சிக்னல் கொடுத்துள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அசோகனைத் தொடர்ந்து திமுகவில் இருந்து மேலும் பல முக்கிய நிர்வாகிகள் விலகி வரக் கூடும் என்றும் அதிமுகவினர் மத்தியில் பேச்சு கிளம்பியுள்ளது.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications