ஊழல் செய்த பிரதமர் பதவியிலிருந்து போன பின்னர் எப்படி பிடிக்க முடியும்-சந்தோஷ் ஹெக்டே

லோக்பால் மசோதா கூட்டு வரைவுக் கமிட்டியில் உறுப்பினராக இருக்கிறார் ஹெக்டே. கபில் சிபல் பேச்சு குறித்து அவர் கூறுகையில், ஒரு பிரதமர் மீது ஊழல் புகார் எழுந்தால் அவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் அல்லது ராஜினாமா செய்த பின்னர் நடவடிக்கை எடுக்கலாம் என அமைச்சர் கபில் சிபல் கூறுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.
ஊழல் செய்த ஒருவரை தொடர்ந்து பதவியில் நீடிக்க விட்டால் அல்லது அவர் பதவி விலகட்டும் பார்க்கலாம் என்று காத்திருந்தால் அத்தனை ஆதாரங்களையும், சாட்சிகளையும் அவர் கலைத்து விட மாட்டாரா?
உண்மையான, நியாயமான புலனாய்வு விசாரணைக்கு அது குந்தகம் விளைவிக்காதா? அதை விட முக்கியமாக ஒருவர் ஊழல் செய்து விட்டால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதுதானே சட்டப்படியான நடவடிக்கையாக இருக்க முடியும். மாறாக, அவர் பதவியிலிருந்து விலகட்டும் என்று காத்திருக்கச் சொல்வது ஒரு அமைச்சருக்கு அழகா? என்று விளாசியுள்ளார் ஹெக்டே.












Click it and Unblock the Notifications