ஆந்திராவிலிருந்து சென்னைக்கு 2 நாளில் கிருஷ்ணா நீர் திறப்பு
சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து 2 நாட்களில் கிருஷ்ணா நதி நீர் சென்னை நகருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
தமிழக-ஆந்திர அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர மாநிலம் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும். இந்த நீர் சென்னை நகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த ஆண்டு சென்னைக்கு 7.01 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீரைத் தான் ஆந்திரா வழங்கியது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் இந்த நீர் கிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னை வருகிறது. கண்டலேறு அணையில் 6.3 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் சென்னைக்கு தண்ணீரை விட முடியும்.
இப்போது அந்த அணையில் 35 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. எனவே, தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஆந்திராவுக்கு தமிழகம் கோரிக்கை விடுத்தது. இது குறித்து வலியுறுத்த தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா சென்றுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது கிருஷ்ணாகால் வாயில் தண்ணீர் திறக்கும் தேதி முடிவாகிறது. இன்னும் 2 நாட்களில் கிருஷ்ணா தண்ணீர் சென்னைக்கு திறந்து விடப்படும் என்று தெரிகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது 5,407 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இது அக்டோபர் வரை சென்னைக்கு குடிநீர் வழங்க போதுமானது. கிருஷ்ணா நீரும் வந்துவிட்டால் சென்னை நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு வராது.
-
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications