ஆந்திராவிலிருந்து சென்னைக்கு 2 நாளில் கிருஷ்ணா நீர் திறப்பு
சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து 2 நாட்களில் கிருஷ்ணா நதி நீர் சென்னை நகருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
தமிழக-ஆந்திர அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர மாநிலம் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும். இந்த நீர் சென்னை நகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த ஆண்டு சென்னைக்கு 7.01 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீரைத் தான் ஆந்திரா வழங்கியது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் இந்த நீர் கிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னை வருகிறது. கண்டலேறு அணையில் 6.3 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் சென்னைக்கு தண்ணீரை விட முடியும்.
இப்போது அந்த அணையில் 35 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. எனவே, தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஆந்திராவுக்கு தமிழகம் கோரிக்கை விடுத்தது. இது குறித்து வலியுறுத்த தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா சென்றுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது கிருஷ்ணாகால் வாயில் தண்ணீர் திறக்கும் தேதி முடிவாகிறது. இன்னும் 2 நாட்களில் கிருஷ்ணா தண்ணீர் சென்னைக்கு திறந்து விடப்படும் என்று தெரிகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது 5,407 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இது அக்டோபர் வரை சென்னைக்கு குடிநீர் வழங்க போதுமானது. கிருஷ்ணா நீரும் வந்துவிட்டால் சென்னை நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு வராது.
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications