ஆந்திராவிலிருந்து சென்னைக்கு 2 நாளில் கிருஷ்ணா நீர் திறப்பு
சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து 2 நாட்களில் கிருஷ்ணா நதி நீர் சென்னை நகருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
தமிழக-ஆந்திர அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர மாநிலம் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும். இந்த நீர் சென்னை நகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த ஆண்டு சென்னைக்கு 7.01 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீரைத் தான் ஆந்திரா வழங்கியது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் இந்த நீர் கிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னை வருகிறது. கண்டலேறு அணையில் 6.3 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் சென்னைக்கு தண்ணீரை விட முடியும்.
இப்போது அந்த அணையில் 35 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. எனவே, தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஆந்திராவுக்கு தமிழகம் கோரிக்கை விடுத்தது. இது குறித்து வலியுறுத்த தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா சென்றுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது கிருஷ்ணாகால் வாயில் தண்ணீர் திறக்கும் தேதி முடிவாகிறது. இன்னும் 2 நாட்களில் கிருஷ்ணா தண்ணீர் சென்னைக்கு திறந்து விடப்படும் என்று தெரிகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது 5,407 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இது அக்டோபர் வரை சென்னைக்கு குடிநீர் வழங்க போதுமானது. கிருஷ்ணா நீரும் வந்துவிட்டால் சென்னை நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு வராது.












Click it and Unblock the Notifications