2வது முறையாக ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் தேர்வு

இதுவரை இப்படி ஒரு சொதப்பலான பொதுச் செயலாளரை ஐ.நா. கண்டதில்லை என்று கூறும் அளவுக்கு பல முக்கிய சர்வதேசப் பிரச்சினைகளில் மெளன குருவாக இருந்து கழுத்தை அறுத்தவர் இந்த பான் கி மூன். குறி்ப்பாக இலங்கை இனப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிந்தபோது, லட்சோபம் லட்ச தமிழ் மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டபோது கொட்டாவி விட்டபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் பான்.
இந்த பான் தற்போது மீண்டும் ஐ.நா. பொதுச் செயலாளராகியுள்ளார் - 2வது முறையாக. அடுத்த ஐந்து வருடங்களுக்கும் இவர்தான் பொதுச் செயலாளராக செயல்படுவார்.
தென் கொரியாவைச் சேர்ந்தவர் பான் கி மூன். மீண்டும் தான் ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு நிற்கப் போவதாக பான் கி மூன் சமீபத்தில் தான் ஐ.நா. பொதுச் சபைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து இவரை 192 நாடுகளும் ஒரு மனதாக பொதுச் செயலாளர் பதவிக்கு மீண்டும் தேர்வு செய்தன. இதையடுத்து இவரது 2வது பதவிக்காலம் 2012ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தொடங்குகிறது.
2வது பதவி்க்காலத்திலாவது இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு உதவ உருப்படியான நடவடிக்கைகளை பான் கி மூன் எடுப்பாரா என்று பார்ப்போம்.












Click it and Unblock the Notifications