50 பைசா நாணயம் செல்லும்! - ரிசர்வ் வங்கி
Subscribe to Oneindia Tamil

தற்போது புழக்கத்தில் இருக்கும் 25 காசு நாணயம் வருகிற 29-ந் தேதிக்கு பிறகு செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதே போல் 50 காசு நாணயம் செல்லாது என தகவல்கள் வெளியாகின.
கடைகாரர்கள் 50 காசுகளையும் வாங்க மறுக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து 50 காசு நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிக்கையில், "25 காசு மட்டுமே 29-ந் தேதிக்கு பிறகு செல்லாது. மேற்கண்ட தேதிக்குள் 25 காசு வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். காசு தேவை அதிகமாக இருப்பதால் 50 பைசா செல்லும்," என்று சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications