Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை மேயர் தேன்மொழிக்கு முன்ஜாமீன் வழங்கியது மதுரை உயர்நீதிமன்ற பெஞ்ச்

Subscribe to Oneindia Tamil

மதுரை: லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தொடர்ந்துள்ள வழக்கில் மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதனுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

திமுகவைச் சேர்ந்த மேயர் தேன்மொழி உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சமீபத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அவர் மீது ஜெயராமன் என்ற வழக்கறிஞர் மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மதிச்சியம் பகுதியில், மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை சுந்தரராஜன் என்பவர் ஆக்கிரமித்துள்ளார். அவர் மீது இதுவரை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுதொடர்பாக சுந்தரராஜனிடம் கேட்டால் அவர் மிரட்டுகிறார். மேலும் உள்ள நிலத்தையும் ஆக்கிரமிப்பேன் என்று கூறுகிறார். எனவே இதுகுறித்து மதுரை மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்து தேன்மொழி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து முன்ஜாமீன் கோரி தேன்மொழி உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமனறக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற பெஞ்ச், தேன்மொழிக்கு இன்று முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+