நில அபகரிப்பு: கோவை திமுக நிர்வாகி கைது-மேலும் சிலர் கைது?

Subscribe to Oneindia Tamil

கோவை: நில அபகரிப்பு வழக்கில் கோவை திமுக துணைச் செயலாளர் ஆனந்தன் இன்று கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் சில திமுக பிரமுகர்கள் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது.

கோவையில் கடந்த 5 ஆண்டு காலமாக ஏராளமான நிலங்கள் அபகரிக்கப்பட்டதாக புகார்கள் வந்தன. இது குறி்த்து விசாரிக்க கோவை போலீசார் நில அபகரிப்பு மீட்பு படை ஒன்றை அமைத்தனர்.

இந்தப் படை நில அபகரிப்பில் ஈடுபட்ட திமுக பிரமுகர்களை ரகசியமாக கண்காணித்து வந்தது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார்களில் கோவை மாவட்ட ஊராட்சி துணை தலைவரும், மாவட்ட திமுக துணைச் செயலாளருமான ஆனந்தன் மீதுள்ள நில அபகரிப்பு புகார் நிலுவையில் இருந்தது.

கடந்த 6 மாதத்திற்கு முன் தொண்டாமுத்தூர் ஏ.டி.டி. காலனியைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீசர்மா என்பவர் ஆனந்தன் தன்னிடம் இருந்து ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக புகார் கொடுத்தார். ஆட்சி மாறிய பிறகு மீண்டும் அந்த புகாரை நினைவு கூர்ந்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி ஆனந்தனை கைது செய்ய இன்று அதிகாலை அவரது வீட்டிற்குச் சென்றனர். போலீசாரைக் கண்டவுடன் தப்பிக்க முயன்ற அவரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரிக்கப்பட்டது.

விசாரணையில் ஆனந்தன் கடந்த 6 மாதத்திற்கு முன் ஸ்ரீசர்மாவிடம் ரூ. 25 லட்சத்திற்கு 2 பிளாட்டுகளை விற்றுவிட்டு, பின் அவரை மிரட்டி அதை அபகரித்து வேறொருவருக்கு விற்றது தெரியவந்தது.

நில அபகரிப்பு வழக்கில் மேலும் சில திமுக பிரமுகர்கள் கைதாகலாம் என்பதால் பிரமுகர்கள் கதி கலங்கிப் போய் இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+