செத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸுக்கு உயிர் கொடுக்க வேண்டாம்: ரங்கசாமிக்கு பாஜக கோரிக்கை
சென்னை: புதுவை முதல்வர் ரங்கசாமி தனது ஆட்சிக்கு உயிர் கொடுப்பதற்காக செத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுத்துவிட வேண்டாம் என்று பாஜக தேசிய கவுன்சில் உறுப்பினரும், மூத்த தலைவருமான இல. கணேசன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் பாஜக சார்பில் ஊழல் ஒழிப்பு மற்றும் கறுப்பு பணம் மீட்பு குறித்த பொதுக் கூட்டம் நடந்தது.
அதில் கலந்து கொண்ட இல. கணேசன் பேசுகையில், "ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ரங்கசாமி தான் வெற்றி பெற்ற இரண்டில் ஒரு இடத்தில் பதவியை ராஜினாமா செய்தார். 14 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு அவரால் எவ்வாறு தனித்து ஆட்சியமைக்க முடிந்தது?
நான் இங்கு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும்போதே என். ஆர். காங்கிரஸுக்கு வாக்களித்து ஏமாறாதீர்கள் என்று கூறினேன்.
நான் அப்போது யூகித்து கூறியிருந்தாலும் காங்கிரஸார்களின் புத்தி எனக்கு நன்கு தெரியும். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலையை கிளப்பிவிட்டு ஓட்டு வாங்கிய ரங்கசாமி தற்போது முதல்வரான பிறகு தனது அலுவலகத்தில் சோனியா காந்தியின் புகைப்படத்தை வைத்திருக்கிறார். இப்பொழுதுதான் மக்களுக்கு அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
முlல்வர் ரங்கசாமி டெல்லி சென்றபோது பிரதமரைச் சந்திக்கவில்லை. ஆனால் சோனியா காந்தியை மட்டும் சந்தித்துவிட்டு வந்தார். பாஜகவைச் சேர்ந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி டெல்லி செல்கையில் நிர்வாகக் காரணங்களுக்காக தவறாது பிரதமரை சந்தி்க்கிறார். ரங்கசாமி சோனியாவை மட்டும் சந்தித்தது ஏன்?
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை வீசுகிறது. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி தனது ஆட்சிக்கு உயிர் கொடுக்க விரும்பி செத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுத்துவிட வேண்டாம்," என்று அவரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications