கடல் அலை ஓய்ந்தாலும் மக்களுக்கான மதிமுக போராட்டம் ஓயாது! - வைகோ

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: கடல் அலை ஓய்ந்தாலும் மதிமுகவின் மக்களுக்கான போராட்டம் ஓயாது. தமிழக மக்களுக்காக மதிமுக கடைசிவரை போராடிக்கொண்டே இருக்கும், என வைகோ கூறினார்.

மத்திய அரசை கண்டித்து மதிமுக சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார்.

அவர் கூறுகையில், "விலை வாசி உயர்வு மூலம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மக்கள் விரோத அரசு என்பதை நிரூபித்திருக்கிறது. இவர்கள் உலக அளவில் கச்சா எண்ணை விலை குறைந்திருந்த காலத்தில் கூட இங்கு விலைவாசியை குறைத்தது இல்லை.

இப்போதும் அதே காரணத்தைதான் சொல்கிறார்கள். கச்சா எண்ணை உயர்ந்ததால் டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தியதாக சொல்லுகிறார்கள்.

ஆனால் இவர்களுடைய நோக்கம் பெரு முதலாளிகளும், தனியார் எண்ணை நிறுவனங்களும், லாபம் அடைய வேண்டும் என்பதற்காகவே துணை போகிறார்கள்.

இன்னும் சிலர் விலையை குறைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால், இந்த விலையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பதே மதிமுகவின் கோரிக்கை.

இதனால் நடுத்தர மக்களும் தினக்கூலியாக உழைப்பவர்களூம், பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். மற்ற மாநிலங்களில் விலைவாசியை கட்டுப்படுத்தியை அரசுகள் போல் தமிழகத்திலும் செய்வார்கள் என்று நம்புகிறோம்.

கடல் அலை ஓய்ந்தாலும் மதிமுகவின் மக்களுக்கான போராட்டம் ஓயாது. தமிழக மக்களுக்கு எந்த பிரச்சனை நடந்தாலும் அங்கு மதிமுக தனது போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தமிழக மக்களுக்காக மதிமுக கடைசிவரை போராடிக்கொண்டே இருக்கும்"" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+