மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூன் 30-ல் ஆரம்பம்!

கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் இந்த கவுன்சிலிங் நடக்கிறது.
காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த கவுன்சிலிங் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது. ஜூன் 30-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை தொடர்ந்து பல்வேறு பிரிவினருக்கு தனித்தனியாக கவுன்சலிங் நடக்கிறது.
ஜூன் 30-ம் தேதி விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணவத்தினரின் பிள்ளைகளுக்கான இட ஒதுக்கீட்டுக்காக கவுன்சலிங் நடக்கிறது.
ஜுலை 1 ந் தேதி பொது கவுன்சிலிங் நடக்கிறது. இது பொதுப்பிரிவினருக்கானது. இதில் அதிக மார்க் எடுத்த அனைத்து சமூகதைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் கலந்து கொள்கின்றனர்.
ஜூலை 2 ந் தேதி பிற்பகல் 2 மணிக்கும், 4 ந் தேதி காலை 9 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு மட்டும் கவுன்சலிங் நடக்கும்.
ஜூலை 4 ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு முஸ்லிம்களுக்கும் நடத்தப்படுகிறது.
ஜூலை 5 ந் தேதி காலை 9 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கும் மிகப் பிற்பட்டோருக்கு கவுன்சலிங் நடைபெறுகிறது.
6 ந் தேதி காலை 9 மணிக்கு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கவுன்சிலிங் நடக்க உள்ளது. அன்று பிற்பகல் 2 மணிக்கு அருந்ததியினருக்கும், மலைவாழ் பழங்குடி மக்களுக்கும் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கவுன்சிலிங்குக்கு வரும் நேரம், கட் ஆப் மார்க் விவரம் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ மாணவிகள் கவுன்சிலிங்குக்கு அவர்களுக்கு குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாக வந்துவிடவேண்டும். இதுகுறித்து விண்ணப்பித்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தனிப்பட்ட கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்காவிட்டாலும் இணையதளத்தை பார்த்து கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளவேண்டும்.
பிளஸ் 2 தேர்வில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில் மார்க் மாற்றம் இருந்தால் அதற்கான சரியான சான்றுடன் மாணவர்கள் வரவேண்டும். கவுன்சிலிங்கின்போது இருக்கும் இடம்தான் கொடுக்கப்படும்.
முதல் கட்ட கவுன்சிலிங்கின்போது மாணவர்கள் வரவில்லையென்றால் 2 வது கட்ட கவுன்சிலிங்குக்கு வர அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications