கேரள மாணவி பலாத்கார வழக்கில் 45 பேர் கைது: அடையாள அணிவகுப்பு நடத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

கொல்லம்: கேரளாவில் 14 வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மாணவி அடையாளம் காட்டுவதற்காக அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குமரி கான்டிராக்டர் மணிகண்டன், கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி தாமஸ் வர்கீஸ், கோவை மின் ஊழியர் முருகேசன், எர்ணாகுளம் புத்தன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் உறுப்பினர் எல்தோ மாத்யூ, இவருடைய கார் டிரைவர் ஸ்வராஜ், ஆலுவா பகுதியைச் சேர்ந்த பெண் புரோக்கர் லில்லி உள்பட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரள மாநில மூவாற்றுபுலா பகுதியைச் சேர்ந்த முகமது சாலி, ஏழூர் பகுதியைச் சேர்ந்த பீரான் ஆகியோரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான பீரான் நகைக்கடை அதிபர். இதன்மூலம் கைதானவர்களின் எண்ணிக்கை 45-க உயர்ந்துள்ளது. இன்னும் 20 பேர் வரை கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

அவர்களில் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குமரி மாவட்ட இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமறைவாக இருக்கிறார். இவரை பிடிக்க தமிழகத்தில் 2 கேரளா தனிப்படைகள் முகாமிட்டுள்ளன.

மாணவியின் உடல் நிலை நன்றாக இருப்பதால் அவரிடம் விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். கைதான சிலரை நேரடியாகவும், சிலரை போட்டோக்கள் மூலமும் மாணவி அடையாளம் காட்டி இருக்கிறார். எனவே கைதான அனைவரையும் வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக ஆலுவா நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+