ஜப்பானை மீண்டும் தாக்கிய நிலநடுக்கம்- 7 பேர் காயம்-சுனாமி எச்சரிக்கை இல்லை
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: ஜப்பானின் நகனோ என்ற மாகாணத்தில் இன்று 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 7 பேர் காயமடைந்தனர். இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
நகனோ மாகாணத்தின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் சிக்கி 7 பேர் காயமடைந்தனர். இந்திய நேரப்படி இன்று காலை 8.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
மத்திய நகனோ மாகாணத்தில்அடியில் நிலநடுக்கத்தின் மையப் புள்ளி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5.1 ரிக்டர் அளவிலான இன்னொரு நிலநடுக்கமும், 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications