கன்னியாகுமரி மீனவர்களை கண்டித்து தூத்துக்குடி மீனவர்கள் வேலை நிறுத்தம்
தூத்துக்குடி: கன்னியாகுமரி விசைப்படகுகள் தூத்துக்குடி கடல் பகுதிக்குள் அத்தூமீறி தங்கி மீன்பிடிப்பதை கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இதில் தூத்துக்குடியில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இவை அனைத்தும் தினமும் காலை 5 மணிக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்லும். இரவு 9 மணிக்குள் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, தங்கி மீன் பிடிக்கவோ அனுமதி இல்லை. இந்நிலையில் தற்போது 45 நாட்கள் தடை காலத்திற்கு பின்னர் மீண்டும் விசைப்படகுகள் மீ்ன்பிடிக்க சென்று வருகின்றன.
ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்துள்ள ராமநாதபுரம் மற்றும் குமரி மாவட்டத்தில் விசைபடகுகள் இரவு நேரத்தில் கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி உள்ளது. இதனால் குமரி மாவட்ட விசைப்படகுகள் தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் அத்துமீறி வந்து இரவு நேரத்தில் தங்கி மீன்பிடிக்கின்றனர். இதனால் தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளுக்குள் நுழைந்து தங்கி மீன்பிடிக்கும் குமரி மாவட்ட விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தூத்துக்குடி மாவட்ட விசைப்படகுகளையும் தங்குகடல் மீன்பிடித்தலுக்கு அனுமதிக்க வேண்டும் என விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் கூறுகையில்,
இந்த பிரச்சனை குறி்த்து விசைப்படகு உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளோம். இன்று வழக்கம்போல் கடலுக்கு செல்கிறோம். நாளை (30-ம் தேதி) மாலை இது குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். இதில் சுமூக உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டத்தை தொடர நேரிடும் என தெரிவித்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications