வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு: ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியா முழுவதும் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் இந்த மாதம் 7-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேலை நிறுத்தம் ஆகஸ்டு 5-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தகவலை, ஐக்கிய வங்கி ஊழியர்களின் சங்க ஒருங்கிணைப்பாளர் சி.எச். வெங்கடாச்சலம் சென்னையில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்குகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஆகஸ்டு 5-ந் தேதிக்கு வேலை நிறுத்தத்தை தள்ளி வைத்திருக்கிறோம்'' என்றார்.
இதுபற்றி அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் விஷ்வாஸ் உதாகி கூறுகையில், "வேலை நிறுத்தத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொள்வார்கள்'' என்றார்.












Click it and Unblock the Notifications