ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரிய ஹேமமாலினி கொடும்பாவியை எரித்து மதுரையில் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று பேசிய நடிகை ஹேமமாலினியின் கொடும்பாவியை எரித்து மதுரை அருகே இன்று மாடுபிடி வீரர்கள் போராட்டம் நடத்தினர்.
சமீபத்தில் பேசிய ஹேமமாலினி, உயிர்களைப் பறிக்கும் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள், கிராம மக்கள், ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று மதுரை கருப்பாயியூரணி பகுதியில் 50க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் கூடினர். அவர்கள் ஹேமமாலினியின் பேச்சைக் கண்டித்து குரல் எழுப்பி கோஷமிட்டனர். பின்னர் ஹேமமாலினியின் கொடும்பாவியை தீவைத்துக் கொளுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications