கருப்புப் பண விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது சுப்ரீம் கோர்ட்

சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்கள் 26 பேர்களின் கறுப்புப் பணம் பற்றிய விவரத்தை அறிவிக்க வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஆஜராகிய அரசு வக்கீல், "சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்போரின் பெயர் விவரத்தையும், எவ்வளவு தொகை? என்பதையும் வெளியிட முடியாது. இது இந்தியா-சுவிஸ் நாடுகள் இடையே ஏற்கனவே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தத்துக்கு எதிரானது'' என்று வாதிட்டார்.
இந்த நிலையில் உச்சநீதி மன்றத்துக்கு கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கோடை கால விடுமுறைக்கு பின், உச்சநீதிமன்றம் இன்று செயல்பட தொடங்கியது. அப்போது முக்கிய வழக்காக இந்த கருப்புப் பண விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜீவன் ரெட்டி செயல்பவடுவார் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
தனி புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டிருப்பது மத்திய அரசுக்குக் கிடைத்த பெரும் தோல்வியாக கருதப்படுகிறது. மேலும் இந்த விசாரணைக் குழுவின் மூலம் கருப்புப் பண விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications