சிறுவன் தில்ஷனைக் கொன்ற ராணுவத்தினரைக் கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: சென்னை தீவுத் திடல் ராணுவக் குடியிருப்பு வளாகத்தில் 13 வயது சிறுவன் தில்ஷனை சுட்டுக் கொன்றவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தீவுத் திடலில் உள்ள ராணுவக் குடியிருப்பு வளாகத்திற்குள் பாதாம் பழங்களை எடுக்கச் சென்ற தில்ஷன் என்ற 13 வயது சிறுவனை ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொன்று விட்டனர்.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் குற்றவாளியைக் கைது செய்ய விடாமல் ராணுவத் தரப்பில் முட்டுக்கட்டை போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீஸார் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சம்பவம் நடந்து 2 நாட்களைத் தாண்டி விட்ட நிலையில் சுட்டது யார் என்பது தெரியாமல் இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபமும், அதிருப்தியும் நிலவுகிறது.
இந்த நிலையில், தமிழக மக்கள் உரிமைக் கழக தலைவர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், சென்னை ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில தில்ஷான் (என்ற சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு காரணமான நபரை கைது செய்ய மாநில போலீசார் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளனர். ருப்பினும், ராணுவ அதிகாரிகள் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை.
சிறுவனின் இறப்பு சான்றிதழில் குண்டு காயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் துப்பாக்கியால் சுட்டதால் மாணவன் உயிரிழந்ததும், ராணுவக் குடியிருப்பு வளாகத்திலேயே சிறுவன் இறந்திருப்பதும் தெளிவாகிறது.
அப்பாவி சிறுவன் ராணுவக்குடியிருப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் காட்டுமிராண்டித்தனமான செயல். நாட்டை காக்க வேண்டிய ராணுவ வீரர்கள் குடியிருப்பில் ஒரு சிறுவனின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.
இதுபோன்ற மோசமான சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் கைது செய்யத் தவறியதும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க ராணுவ அதிகாரிகள் தவறியதும் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும்.
ஆகவே, சிறுவனின் சாவுக்கு காரணமான ராணுவ வீரரை உடனடியாக கைது செய்யும் படி சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications