தெலுங்கானா மாநிலத்திற்காக எம்.பி. பதவிகளை உதறினர் சந்திரசேகர ராவ், விஜயசாந்தி
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி தங்களது எம்.பி பதவிகளை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் கட்சி எம்.பி. விஜயசாந்தி ஆகியோர் இன்று ராஜினாமா செய்தனர்.
தங்களது ராஜினாமா கடிதங்களை அவர்கள் லோக்சபா சபாநாயகர் மீரா குமாருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் மீரா குமாரை சந்திரசேகர ராவ் நேரில் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஆந்திர மாநில ஜவுளித்துறை அமைச்சர் சங்கர் ராவ், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் அங்கிருந்தபடி தனது ராஜினாமா கடிதத்தை ஆந்திர சட்டசபை துணை சபாநாயகருக்கு பேக்ஸ் செய்துள்ளார். இதன் மூலம் ராஜினாமா செய்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை தெலுங்கானா கோரிக்கைக்காக காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
ராஜினாமா குறித்து சந்திரசேகர ராவ் கூறுகையில், இந்த ராஜினாமா வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இனியாவது மத்திய அரசு தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications