ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 14-க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சி ஒருவரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் தோழி சசிகலா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மீது இந்த வாரம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நடந்தது. சசிகலா மனு மீதான தீர்ப்பு இந்த வாரத்தில் வரக்கூடும் என்பதால் நீதிபதி மல்லிகார்ஜுனையா இந்த வழக்கை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications