முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்டும் பணிக்கு ரூ. 5 கோடி ஒதுக்கியது கேரளா

முல்லைப் பெரியாறு அணையை இடித்துத் தரைமட்டமாக்குவது, புதிய அணையைக் கட்டி அதை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தமிழகத்தை தவிக்க விடுவது என்பதில் கேரளா உடும்புப் பிடியாக உள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்து கடுமையான சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்ட கேரள அரசு தற்போது முதல் கட்டப் பணிகளுக்காக ரூ. 5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. கேரள சட்டசபையில் அந்த மாநில நிதியமைச்சர் கே.எம்.மோனி பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசினார்.அப்போது முல்லைப் பெரியாறு புதிய அணையின் முதல் கட்டப் பணிகளுக்காக ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். இந்தப் பணிகளை செயல்படுத்த புதிய ஆணையகம் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
முல்லைப் பெரியாறில் புதிய அணையைக் கட்டும் கேரளாவின் முயற்சிகளுக்கு எதிராக தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கேரள அரசோ அணை தொடர்பான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கேரளாவின் இந்த தைரியமான தொடர் பணிகளின் பின்னணி என்ன என்பதும் புரியாத புதிராக உள்ளது.












Click it and Unblock the Notifications