ஜிப்மர் மருத்துவமனையில் குழந்தையை கடத்திய பெண், காதலனுடன் சென்னையில் கைது
சென்னை: புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து பெண் குழந்தையைக் கடத்திய பெண், தனது கள்ளக்காதலுருடன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சமுத்திரம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன்(36). விவசாயக் கூலி. அவரது மனைவி மகேஸ்வரி(26). மகேஸ்வரிக்கு கடந்த 5-ம் தேதி் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையை மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் கடத்திச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்து பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின. இதைப் பார்த்த குரோம்பேட்டையைச் சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் புதுவை போலீசாரை தொடர்பு கொண்டு அந்த குழந்தையை கடத்திய பெண் தனது காரில் தான் குரோம்பேட்டை வந்ததாகத் தெரிவித்தார்.
இதையடுத்து புதுவை போலீசார் குரோம்பேட்டை விரைந்தனர். அந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை மீட்டனர். அவர் பெயர் சுமித்ரா என்கிற பாத்திமாகனி. அதே பகுதியில் கவரிங் நகைக் கடை நடத்தி வந்தார். அவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்துள்ளது. இருப்பினும் கணவரால் கைவிடப்பட்டவர்.
விசாரணையில் அவர் கூறியதாவது,
எனக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகியும் கணவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. முதல் கணவர் மூலம் 10 வயது மகன் இருக்கிறான். இந்நிலையில் தான் எனக்கு கனி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு, அவரை 3-வது கணவராக ஏற்றுக் கொண்டேன். அப்போது கர்ப்பமடைந்த எனக்கு குழந்தை இறந்தே பிறந்தது.
இந்த விஷயம் கனிக்கு தெரியாது. எனவே அவரை ஏமாற்ற ஒரு குழந்தை வேண்டும் என்று நினைத்த நான் மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்த முடிவு செய்தேன். எனக்கு கிரிதரபிரசாத் என்ற கள்ளக்காதலன் இருந்தார். அவரிடம் இது பற்றி கூறினேன்.
உடனே நாங்கள் இருவரும் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று அங்கு ஒரு பாட்டி மற்றும் தாயிடம் நைசாகப் பேசி பெண் குழந்தை ஒன்றை கடத்தினேன். ஆனால் கார் டிரைவரால் சிக்கிக் கொண்டோம் என்றார்.
சுமித்ராவுடன், அவரது கள்ளக்காதலன் கிரிதரபிரசாத்தும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தை அதன் தாய் மகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications