பிரதமருடன் மோதிய முகுல் ராயிடமிருந்து ரயில்வே துறை பறிப்பு
டெல்லி: பிரதமர்தான் ரயில்வே அமைச்சர். விபத்து நடந்த இடத்திற்கு நான் போக முடியாது என்று திமிராகப் பேசிய ரயில்வே இணை அமைச்சர் முகுல் ராயிடமிருந்து அத்துறை பறிக்கப்பட்டு கப்பல்துறையை கொடுத்துள்ளார் பிரதமர்.
திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்தவர் முகுல் ராய். இவர் ரயில்வே இணை அமைச்சராக இருக்கிறார். மமதா பானர்ஜி வசம் இருந்த ரயில்வே துறை தற்போது பிரதமரின் பொறுப்பில் உள்ளது. இந்த நிலையில் உ.பியில் நடந்த கோர ரயில் விபத்து மற்றும் அஸ்ஸாமில் நடந்த ரயில் மீதான குண்டு வீச்சு மற்றும் தடம் புரண்ட சம்பவங்களில் முகுல் ராய் உள்பட எந்த ரயில்வே இணை அமைச்சரும் உடனடியாகப் போகவில்லை. மொத்தம் 3 ரயில்வே இணை அமைச்சர்கள் இருந்தும் யாருமே போகாமல் இருந்தது எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தை ஆளுங்கட்சிக்கு சம்பாதித்துக் கொடுத்தது.
இதையடுத்து இணை அமைச்சர் முனியப்பா உ.பி. விபத்து நடந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
அந்த சமயத்தில் மேற்கு வங்கத்தில் இருந்த முகுல் ராயை, அஸ்ஸாம் விபத்து இடத்திற்குப் போய்ப் பார்க்குமாறு பிரதமர் உத்தரவிட்டார். ஆனால் முகுல் ராயோ அதை நிராகரித்து விட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் இப்போது அங்கு போக வேண்டிய அவசியம் இல்லை. அங்கு எல்லாவற்றையும் சரி செய்து விட்டார்கள் ரயில் பாதையும் சரியாகி விட்டது. இனிமேல் எதற்கு நான் போக வேண்டும். பிரதமர்தான் ரயில்வே அமைச்சர், நான் இணை அமைச்சர் மட்டுமே. தற்போது நான் போக வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி விட்டார்.
முகுல் ராயின் இந்தப் பேச்சு காங்கிரஸ் வட்டாரத்தை கடும் ஆத்திரத்துக்குள்ளாக்கியது. இருந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்பதால் அமைதியாகி விட்டனர்.
இந்த நிலையில் இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் முகுல் ராய்க்கு ஆப்பு வைத்து விட்டார் பிரதமர். அவரிடமிருந்து ரயில்வே துறையைப் பறித்த அவர் கப்பல்துறையை கொடுத்துள்ளார். மேலும் ரயில்வே அமைச்சர் பொறுப்புக்கும் முகுல் ராயை பிரதமர் பரிசீலிக்கவில்லை. மாறாக திணேஷ் திரிவேதிக்கு அப்பதவி போய் விட்டது.
தனது துடுக்கு வாயால் இப்போது நல்ல பதவியை இழந்து நிற்கிறார் முகுல் ராய்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications