ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஹேமமாலினிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சை: ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரியுள்ள நடிகையும் எம்பியுமான ஹேமமாலினியைக் கண்டித்து தஞ்சையில் ஜல்லிக்கட்டுக் காளைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழர் வீர விளையாட்டு பேரவையின் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த அமைப்பின் தஞ்சை மாவட்டம் கிளை சார்பில் தஞ்சை மருத்துவக்கல்லூரி 3வது கேட் வாயில் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுடன் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் வீர விளையாட்டுக் கலையைப் பற்றி தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசி தடை செய்ய வேண்டும் என்று கூறிய நடிகையும், பாஜக எம்.பி.யு.மான ஹேமமாலினிக்கு கண்டனங்களைத் தெரிவித்தனர்.
ஹேமமாலினிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications