தயாநிதி-ஏர்செல் விவகாரம்: ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியிடம் சிபிஐ விசாரணை!
Subscribe to Oneindia Tamil

கிட்டத்தட்ட ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திடம் வலுக்கட்டாயமாக விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் சிவசங்கரன்.
ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திடம் விற்க இடைத்தரகராக செயல்பட்டது ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியாகும். இதையடுத்து இந்த வழக்கில் அடுத்தகட்டத்தை அடைந்துள்ள சிபிஐ, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி அதிகாரிகளிடம் இன்று தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.
வங்கியின் கார்போரெட் பிரிவு அதிகாரிகளை டெல்லி சிபிஐ தலைமையகத்துக்கு வரவழைத்து இந்த டீல் தொடர்பான ஆவணங்களைக் கோரினர் சிபிஐ அதிகாரிகள்.
மேலும் ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பது தொடர்பாக வங்கிக்கும் இந்த நிறுவனங்களுக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றம் தொடர்பான முழு ஆவணங்களையும் சிபிஐ கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications