காங்- திமுக நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு புகார்
ஊட்டி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேரங்கோடு பஞ்சாயத்து துணை தலைவர் தங்கபாலு, திமுகவைச் சேர்ந்த நெல்லியாளம் நகராட்சி தலைவர் காசிலிங்கம் ஆகியோர் மீது நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிதாஸ். அவர் தனக்கு சொந்தமான நிலத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேரங்கோடு பஞ்சாயத்து துணை தலைவர் தங்கபாலு, திமுகவைச் சேர்ந்த நெல்லியாளம் நகராட்சி தலைவர் காசிலிங்கம் ஆகியோர் அபகரிக்க முயல்வதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்ட எஸ்.பி. காளிராஜ் மகேஷ்குமாரிடம் அந்தோணிதாஸ் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
அந்தோணிதாஸ் ஆகிய நான், எனது மனைவி அல்போன்சாவுடன் சேரங்கோட்டில் தனியாக வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் தேயிலை விவசாயம் செய்து வருகிறோம்.
எனது மகள் ரோஸ்லீன் என்பவருக்கு 24 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தோம். அவர் கணவருடன் வாழாமல் எங்கள் வீட்டில் தனியாக குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் எனக்கும், எனது மகளுக்கும் இடையே நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
தற்போது இந்த நிலம் தொடர்பாக சேரங்கோடு பஞ்சாயத்து துணை தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தங்கபாலு, திமுகவைச் சேர்ந்த நெல்லியாளம் நகராட்சி தலைவர் காசிலிங்கம் மற்றும் அந்தோணி ஆகியோர் எனக்கு சொந்தமான ரூ. 80 லட்சம் மதிப்புள்ள பட்டா நிலத்தை அவர்களுகுக ரூ. 30 லட்சத்திற்கு கொடுக்குமாறு மிரட்டுகின்றனர்.
நிலத்தை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று எனது மகள் மூலமாகவும், நேரடியாகவும், அப் பகுதியைச் சேர்ந்த காவல் நிலைய ஆய்வாளர் தண்டபாணியுடன் சேர்ந்து மிரட்டுகின்றனர்.
எனவே, எனது நிலத்தை மோசடி செய்ய நினைக்கும் ஆய்வாளர் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர், திமுக நகராட்சி தலைவர் ஆகியோரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். மேலும், அவர்கள் மீது உரிய நவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு மீது வி்சாரணை நடத்தி உண்மை நிலையை அறிய எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். இந்த புகார் உண்மையாகும் பட்சத்தில் திமுக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது நில அபகரிப்பு மோசடி வழக்கு பாய வாய்ப்பு உள்ளது.
இதுவரை நில அபகரிப்பு புகாரில் திமுகவினர் மீது மட்டுமே புகார்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி நிர்வாகி மீதும் நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications