மும்பை: குண்டுகளில் அமோனியம் நைட்ரேட்-அண்டர்வோர்ல்ட் கும்பல் கைவரிசை?

இந்தியன் முஜாகிதீன், லஷ்கர்-ஏ-தொய்பா ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்தோ அல்லது தனியாகவோ நிழல் உலக தாதாக்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த பல காலமாக அமைதியாக இருந்து வந்த அண்டர்வோர்ல்ட் கும்பல் சமீபத்தில் செய்திகளில் அடிபட்டது. தாவூத் இப்ராகிமின் தம்பியின் கார் டிரைவர் கொல்லப்பட்டது, மிட் டே பத்திரிக்கையாளர் ஜே.டே கொலை ஆகிய விஷயங்களில் நிழல் உலக தாதாக்களிடையே நடந்து வரும் மோதலும் அந்தக் கும்பல்கள் இப்போதும் தீவிரமாக செயல்பட்டு வருவதும் வெளிச்சத்துக்கு வந்தது.
நேற்றைய குண்டுகளில் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதில் இந்தியன் முஜாகிதீன் தான் பேர் போனது. நிழல் உலக தாதாக்கள் உதவியோடு இந்த அமைப்பு தான் குண்டுவெடிப்பை நடத்தியிருக்கலாம் என்கின்றனர் உளவுப் பிரிவினர்.
1931ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி 22 காஷ்மீரிகள் டோக்ரா படையினரால் கொல்லப்பட்டனர். இந்த தினத்தை சில காஷ்மீர் அமைப்புகள் மாவீரர் தினமாகக் கொண்டாடி வருகின்றன. நேற்றை குண்டு வெடிப்புகள் அதே தேதியில் நடந்துள்ளதால், இந்தத் தாக்குதலில் காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளின் கைவரிசை இருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications