மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் கோழைத்தனமான தாக்குதல்-பிரதமர், சோனியா கண்டனம்

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh
டெல்லி: மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒரு கோழைத்தனமான தாக்குதல். இதற்கு பொருத்தமான பதில் தரப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கூறியுள்ளனர்.

மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிக்கையில்,

மும்பையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மகாராஷ்டிர முதல்வரைத் தொடர்பு கொண்டு பேசினேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அவரைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

மேலும் மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து செய்து தருமாறு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் கேட்டுக் கொண்டுள்ளேன்.

மும்பை மக்கள் மிகவும் அமைதியுடன் இருந்து, தங்களது ஒற்றுமையை உரத்த குரலில் வெளிப்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர்.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி வெளியிட்ட அறிக்கையில், இது மிகவும் கோழைத்தனமான தாக்குதல். இதற்கு பொருத்தமான பதிலடி தரப்படும்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் மிகவும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் இருந்த இதுபோன்ற தீய சக்திகள் வெல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+