ஸ்பெக்ட்ரம் ஊழல் வளையத்தில் தமிழக முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்

சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வரை முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் பெயரைக் கேட்டாலே தி.மு.க.வினர் முதல் உயர் காவல்துறை அதிகாரிகள் வரை அத்தனை பேரும் நடுங்குவார்கள்.
கருணாநிதியோடு பல வருட நட்பு கொண்ட முன்னாள் அமைச்சர்களே ஜாபரைக் கண்டால் மிரட்சியாகத்தான் பார்ப்பார்கள்
முதல்வர் கருணாநிதியே கூட, எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், “ஜாபர் கிட்ட சொல்லுய்யா"" என்று சொல்லும் அளவுக்கு முழுக்க முழுக்க கருணாநிதியின் நம்பிக்கையைப் பெற்று அவரின் கண்களாகவும், காதுகளாகவும் திகழ்ந்தவர்.
தேர்தல் அறிவிப்பு வெளி வந்ததும், ஜாபர் சேட் மீதான புகார்கள் தேர்தல் ஆணையத்தின் முன் குவியத் தொடங்கின. ஜாபர் சேட்டை நேரில் வரவழைத்த ஆணையம், நேரடியாக விசாரணை நடத்தி, மேற்கு வங்கத்திற்கு பார்வையாளராகச் செல்லும்படி உத்தரவிட்டது.
அதனை ஏற்க மறுத்த ஜாபர் சேட், விடுப்பில் சென்றார். எப்படியும் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும் என்று நம்யிருந்தார் ஜாபர் சேட். ஆனால் தேர்தல் முடிந்து அ.தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியதும், மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டார்..
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரானதும், லஞ்சமாக ஏராளமான பணம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற நிறுவனங்களால் கொடுக்கப்பட்டது. இந்தப் பணத்தை தமிழகத்திற்குக் கொண்டு வந்தபோது அந்தப் பணத்தை பல்வேறு வழிகளில் முதலீடு செய்வதற்கு ஜாபர் உதவி புரிந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
இதையடுத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜாபர் சேட்டுக்கு தொடர்பு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும், மத்திய உளவுத்துறையினரும் , மாநில உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாகத் கூறப்படுகின்றது. ஆனால், இந்த தகவலை ஜாபர் சேட் வட்டாரம் மறுக்கின்றது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் அடுத்து சிக்கப் போவது சேட்டா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications