ஆயுள் கைதிக்கு திருமணம்-17 நாட்கள் பரோல் விடுமுறை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஷேக் சிந்தா மதாருக்கு இன்று திருமணம் நடந்தது.

பத்தமடை லெப்பை தெருவைச் சேர்ந்தவர் ஷேக் சிந்தா மதார். இவர் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர். இவர் மீது திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது.

அந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த 2007-ம் ஆண்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கும், இவரது உறவுக்காரப் பெண்ணுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனையடுத்து இவர் கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் வரும் 15-ம் தேதி (இன்று) தனக்கும், தன்னுடைய உறவுக்காரப் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. அதனால் ஒரு மாதம் பரோல் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதனையடுத்து நீதிபதி மனுவை விசாரித்து திருமணத்திற்காக ஷேக் சிந்தா மதாருக்கு இன்று (15-ம் தேதி) முதல் 17 நாட்கள் பரோல் விடுமுறை அளிக்குமாறு காவல் மற்றும் சிறைத்துறைக்கு உத்தரவிட்டார்.

இதன் பேரில் ஷேக் சிந்தா மதார் நேற்று மாலை திருமணத்திற்காக பரோல் விடுமுறையில் பத்தமடையில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு பலத்த போலீஸ் காவலுடன் சென்றார். இன்று காலை பத்தமடையில் அவருக்கு திருமணம் நடந்தது. வரும் 31-ம் தேதி மாலையில் மீண்டும் அவர் பாளை சிறையில் அடைக்கப்படுவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+