பக்ரா நங்கல் அணையை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை

உளவுத் துறையின் சமீபத்திய ரகசிய அறிக்கை ஒன்றை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளிப்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், லஸ்கர்-இ-தொய்பா, ஜமா-உத்-தாவா ஆகிய தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவில் உள்ள முக்கிய அணைகளைத் தகர்க்கமும் சதியில் ஈடுபடுத்தக் கூடும் என்று எச்சரித்துள்ளது.
குறிப்பாக இமாச்சலப் பிரதேசத்தில் சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பக்ரா நங்கல் அணைக்கு உடனடி ஆபத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து இந்த அணைக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு இமாச்சல பிரதேச அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வரும் ஆறுகளில் தண்ணீரை மறிக்கும் மன்மோகன் சிங்குக்கு பாடம் கற்பிக்கும் வகையில், இந்தியாவில் ரத்த ஆறு ஓடச் செய்வோம், என ஜமா-உத்-தாவா தலைவர் அப்துல் ரஹ்மான் மக்கி குறிப்பிட்டுள்ளதை அந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.
இதைத் தொடர்ந்து, பக்ரா நங்கல் தவிர, நாட்டின் முக்கிய பெரிய அணைகள் அனைத்துக்குமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications