கந்துவட்டி, நிலமோசடியில் நெல்லை முதலிடம்: உளவுத்துறை அதிகாரி
நெல்லை: கந்துவட்டியில் தமிழகத்திலேயே நெல்லை மாவட்டம் தான் முதலிடத்தில் இருப்பதாக உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கந்து வட்டி வழக்கில் 145 பேரும், நில மோசடி வழக்கில் 95 பேரும் இது வரை கைதாகியுள்ளனர். கநது வட்டி வழக்கில் நெல்லை மாவட்டத்தில் 53 பேரும், மாநகரத்தில் 7 பேரும், தூத்துக்குடியில் 5 பேரும், கன்னியாகுமரியில் 10 பேரும் என மொத்தம் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நில மோசடி வழக்கில் நெல்லை மாவட்டத்தில் 11 பேரும், மாநகரத்தில் 4 பேரும், தூத்துக்குடியில் 5 பேரும், குமரியில் 5 பேரும் என மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்து வட்டி, நிலமோசடியில் தமிழகத்திலேயே நெல்லைதான் முதலிடத்தில் இருப்பதாக உளவுத்துறை உய் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நெல்லையில் 50 கந்து வட்டி புகாரும், 35 நில மோசடி புகாரும் வந்துள்ளன. இதில் விஐபிக்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்வதில் தயக்கம் காட்டி வருவதாக பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications