ஓட்டு போட்ட மக்கள் தலையில் பாறங்கல்லை போடலாமா?-வைகோ கேள்வி
திசையன்விளை: வரிசையாக வரிகளை உயர்த்தி, ஓட்டு போட்ட மக்கள் தலையில் பாறங்கல்லை தூக்கி போடலாமா என்று மதிமுக பொது செயலாளர் வைகோ அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
திசையன்விளை அருகே இட்டமொழியில் மதிமுக சார்பில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசியதாவது:
தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் மதுகடையில் வரிசையில் நின்று மது வாங்குகிறார்கள். திருமணமா, தூக்க நிகழ்ச்சியா மது பிரதானம் ஆகிறது. 15 நாட்களில் 3 கொலைகள் மதுவினால் ஏற்பட்டுள்ளது.
உலகத்திற்கு மனிதபிமானம் சொல்லி கொடுத்த தமிழ்நாடு எங்கே செல்கிறது, காமராஜர் காலத்திலோ, அண்ணா காலத்திலோ மதுவினால் வருமானம் வரவில்லையே. தற்போது ஒரு தலைமுறை அழிந்து விடும் நிலை உள்ளது. வருமானத்தை பெருக்க விற்பனை வரி, வாட் வரி, துணிகளுக்கு வரி என்று ஓட்டு போட்ட மக்கள் தலையில் பாறாங்கல்லை தூக்கி போடுகின்றனர். இதனை நாங்கள் தட்டி கேட்போம்.
முல்லை பெரியார் பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை, மீனவர் பிரச்சனை உள்பட மக்கள் பிரச்சனைக்காக நாங்கள் குரல் எழுப்புகிறோம். தமிழக அரசு உவரியில் உடனே தூண்டில் அமைத்து கொடுக்க வேண்டும்.
சமச்சீர் கல்வி திட்டத்தி்ல் சரியான கொள்கையை இந்த அரசு பின்பற்ற வில்லை. 15 நாட்கள் பள்ளி கூடம் திறக்கப்படவில்லை. இன்னும் எந்த பாடம் நடத்துவது என தெரியவில்லை. இந்த போக்கு தவறானது. கண்டனத்துக்குரியது.
சுப்ரீம் கோர்ட் ஆணையை மதிக்காமல் பெரியார் அணையை உடைப்போம் என கேரள அரசு சொல்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை நாங்கள் எதிர்த்து வருகிறோம். இதனால் புற்றுநோய் ஏற்படுகிறது. விவசாயம், மீன்பிடி தொழில் பாதிக்கிறது. உயர்நீதிமன்றம் இதனை மூட உத்தரவி்ட்டுள்ளது என்றார் அவர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications