மதுரை- பாராமவுண்ட் விமான நிறுவன அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் இன்று பாராமவுண்ட் விமான நிறுவனத்தின் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.
மதுரையிலிருந்து விமான சேவையை மேற்கொண்டு வரும் நிறுவனங்களில் ஒன்று பாராமவுண்ட் நிறுவனம். கடந்த ஓராண்டாக இந்த நிறுவனத்தின் விமான சேவை ரத்து செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றுகாலை சிபிஐ அதிகாரிகள் இந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர்.
விமான நிலையத்தில் உள்ள பாராமவுண்ட் அலுவலகத்தில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதேபோல திருநகரில் உள்ள அலுவலகத்திலும் ரெய்டு
நடத்தப்பட்டது.
மொத்தம் 10 அதிகாரிகள் கொண்ட குழு இந்த சோதனையில் ஈடுபட்டது. சோதனையின்போது எதுவும் கைப்பற்ஏறப்பட்டதா என்பது தெரியவில்லை. இருப்பினுமம் நஷ்டக் கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications