மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் ரெய்டு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனையில் குதித்தனர்.
மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர் புனரமைப்பு திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சிக்கு ரூ. 6000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்தன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் இன்று காலை டிஎஸ்பி இசக்கி தலைமையில் அதிரடி ரெய்டில் இறங்கினர். நான்கு இன்ஸ்பெக்டர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திட்ட செயற்பொறியாளர் ராஜேந்திரனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்து வருகிறது.
மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடந்து வரும் இந்த சோதனையில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications