மீண்டும் போருக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்-வதந்தி பரப்பும் இலங்கை அரசு!

Subscribe to Oneindia Tamil

LTTE Force
பாரிஸ்: இலங்கையில் நடைபெற்று வந்த போர் முடிவடைந்து இரு ஆண்டுகள் முடிந்த நிலையில், தமிழீழ விடுதலைப புலிகள் மீண்டும் மீண்டும் இணையும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை மேற்கோள் காட்டி இப்போது இலங்கை ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட ஆரம்பித்துள்ளன.

தமிழகம், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், தமிழருக்கான உரிமைகள், இனப்படுகொலைக்கான நீதி கிடைக்க தாமதமாகும்பட்சத்தில் மீண்டும் ஆயுத ரீதியான போருக்கு புலிகள் ஆயத்தமாவதாக அந்த செய்தி கூறுகிறது.

இதுகுறித்து வேறு சில நாடுகளின் புலனாய்வு அமைப்புகளும் உறுதியான தகவல்களை வெளியிட்டுள்ளதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப்போர் யாருடைய தலைமையில், யார் வழிகாட்டலில் நடக்கும் என்பது குறித்த தகவல்களை முடிந்தவரை ரகசியமாக வைத்திருக்கப் போகிறார்கள் புலிகள் அமைப்பினர் என்றும் சில சிங்கள ஊடகங்கள் கூறியுள்ளன.

இனப்படுகொலை பழியிலிருந்து தப்பிக்கும் முயற்சி

ஆனால் இந்த செய்தி இலங்கை அரசின் இன்னொரு கபட நாடகப் பொய்ப் பிரசாரம் என்று தமிழ் உணர்வாளர்கள் கூறுகின்றனர்.

உலக நாடுகள் பலவும் இலங்கையை கிட்டத்தட்ட ஒதுக்கி வைத்துள்ளன. ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்பதை பல நாடுகளும் வலி்யுறுத்தி வரும் வேளையில், இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க புலிகள் போருக்கு ஆயத்தமாவதாக பரபரப்பைக் கிளப்புகிறார்களோ என்ற கேள்வியை தமிழுணர்வாளர்கள் எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+