ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணியை ஆய்வு செய்தார் அமைச்சர் முனுசாமி
கிருஷ்ணகிரி: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணி குறித்து தமிழக அமைச்சர் கே.பி.முனுசாமி ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணி நடந்து வருகிறது. இவற்றை நேற்று ஆய்வு செய்தார் அமைச்சர் கே.பி.முனுசாமி.
மூப்பனார் நகரில் ரூ.43 லட்சம் மதிப்பில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாலிநாயனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கான மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, காரகுப்பம், மத்தூர் அருகேயுள்ள நாகம்பட்டி ஜெ.ஆர்.நகரில் கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
அதன்பின், கட்டுமானப் பணிகளை செய்துவரும் தனியார் நிறுவன திட்ட மேலாளர்களிடம், பணிகளை தரமாகவும், விரைந்து நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட மக்களுக்கு, குடிநீர் வழங்கும் நோக்கில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. ஆய்வின் போது, இத்திட்டத்தில் ஏதாவது கிராமம் அல்லது குடியிருப்புகள் விடுபட்டிருப்பது தெரிந்தால், அவையும் சேர்க்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications