இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முர்டோச் மீது தாக்குதல்: விசாரணை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

Rupert Murdoch
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து விசாரணை நடக்கையில் த நியூஸ் ஆப் த வேர்ல்ட் பத்திரிக்கை உரிமையாளர் ரூபர்ட் முர்டோச்சை ஷேவிங் கிரீமால் ஒருவர் தாக்க வந்தார்.

இங்கிலாந்தின் பிரபல பத்திரிக்கையான த நியூஸ் ஆப் தி வேர்ல்ட் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் மூடப்பட்டது. இந்த விவகாரம் இங்கிலாந்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்நிலையில் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து ஸ்காட்லாந்து யார்ட் முன்னாள் தலைவர் சர். பால் ஸ்டீபன்சன், த நியூஸ் ஆப் த வேர்ல்ட் பத்திரிக்கை உரிமையாளர் ரூபர்ட் முர்டோச், அவரது மகன் ஜேம்ஸ், முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி ஜான் ஏட்ஸ் ஆகியோரிடம் எம்.பி.க்கள் விசாரணை நடத்தினர்.

விசாரணை நடந்து கொண்டிருக்கையில் திடீர் என ஒருவர் ஒரு தட்டில் ஷேவிங் கிரீமுடன் ரூபர்ட்டை தாக்க முயன்றார். இதைப் பார்த்த ரூபர்ட்டின் மனைவி வென்டி டெங்க் தனது இருக்கையில் இருந்து பாயந்து அந்த நபரின் கன்னத்தில் ஒரு அறைவிட்டார்.

இதையடுத்து அந்த நபரை போலீசார் இழுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையும் 10 நிமிடம் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் விசாரணை துவங்கிய போது ரூபர்ட் கோட் இல்லாமல் வந்தார்.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்க ரூபர்ட் மறுத்துவிட்டார். ஆனால் அவரது மகன் ஜேம்ஸ் மன்னிப்பு கேட்டுவிட்டு, இந்த பிரச்சனையை விரைவில் தீர்த்து வைப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்த வழக்கை செய்தித் தாள்களில் படித்துவிட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், வெட்கியதாகவும் ரூபர்ட் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தால் ஊடகம், போலீஸ், பிரதமர் கேமரூன் உள்பட அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+