இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முர்டோச் மீது தாக்குதல்: விசாரணை ஒத்திவைப்பு

இங்கிலாந்தின் பிரபல பத்திரிக்கையான த நியூஸ் ஆப் தி வேர்ல்ட் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் மூடப்பட்டது. இந்த விவகாரம் இங்கிலாந்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்நிலையில் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து ஸ்காட்லாந்து யார்ட் முன்னாள் தலைவர் சர். பால் ஸ்டீபன்சன், த நியூஸ் ஆப் த வேர்ல்ட் பத்திரிக்கை உரிமையாளர் ரூபர்ட் முர்டோச், அவரது மகன் ஜேம்ஸ், முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி ஜான் ஏட்ஸ் ஆகியோரிடம் எம்.பி.க்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணை நடந்து கொண்டிருக்கையில் திடீர் என ஒருவர் ஒரு தட்டில் ஷேவிங் கிரீமுடன் ரூபர்ட்டை தாக்க முயன்றார். இதைப் பார்த்த ரூபர்ட்டின் மனைவி வென்டி டெங்க் தனது இருக்கையில் இருந்து பாயந்து அந்த நபரின் கன்னத்தில் ஒரு அறைவிட்டார்.
இதையடுத்து அந்த நபரை போலீசார் இழுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையும் 10 நிமிடம் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் விசாரணை துவங்கிய போது ரூபர்ட் கோட் இல்லாமல் வந்தார்.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்க ரூபர்ட் மறுத்துவிட்டார். ஆனால் அவரது மகன் ஜேம்ஸ் மன்னிப்பு கேட்டுவிட்டு, இந்த பிரச்சனையை விரைவில் தீர்த்து வைப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்த வழக்கை செய்தித் தாள்களில் படித்துவிட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், வெட்கியதாகவும் ரூபர்ட் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தால் ஊடகம், போலீஸ், பிரதமர் கேமரூன் உள்பட அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications