நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.6% ஆக குறையும்!

பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல வங்கிகள் வீடு, வாகனம் மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டியை உயர்த்தின. இதனால், கடந்த மூன்று மாதங்களாக கார்கள் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதனால் கார்கள், கட்டுமானத்துக்கான முக்கிய இடுபொருளான சிமெண்ட் உற்பத்தியும் குறைந்து வருகிறது.
மேலும் வட்டி விகித உயர்வால் நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளும் அதிகரித்து லாபம் குறைய ஆரம்பித்துள்ளது. இதனால், நிறுவனங்கள் விரிவாக்கத் திட்டங்களில் முதலீடு செய்வதையும் குறைத்து வருகின்றன.
இதன் செயின் ரியாக்ஷனாக பொறியியல் துறை உற்பத்தி வளர்ச்சி வேகமும் குறைந்துள்ளது.
இதனால் மே மாதத்தில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துவிட்டது.
இந்தக் காரணங்களால் 2010-11ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.6 சதவீதமாகக் குறையும் என மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications