சுரங்க மோசடி: லோக் ஆயுக்தா அறிக்கை லீக்-எதியூரப்பா, குமாரசாமி மீது குற்றச்சாட்டு

லோக் அயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கர்நாடகாவில் சுரங்கமோசடி குறித்து விசாரணை நடத்தி தனது அறிக்கையை சமர்பித்துள்ளார். இதில் கர்நாடக முதல்வர் எதியூரப்பா, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.
அந்த அறிக்கையில் முதல்வர் எதியூரப்பா சுரங்க நிறுவன உரிமையாளர்களான ரெட்டி சகோதரர்களுக்கு உதவியதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பல பிரச்சனையில் சிக்கியிருக்கும் முதல்வர் எதிரயூரப்பாவுக்கு இந்த அறிக்கை பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
இந்நிலையில் எதியூரப்பா தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், இந்த சுரங்க மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
சுரங்க மோசடியில் ஈடுபட்டுள்ள எதியூரப்பா உடனே பதவி விலக வேண்டும் என்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்துள்ளார்.
இந்த சுரங்க மோசடியால் அரசுக்கு 14 மாதத்தில் ரூ. ஆயிரத்து 800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக லோக் அயுக்தா நீதீபதி சந்தோஷ் ஹெக்டே குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் எதியூரப்பாவை பதவி விலகச் சொல்கிறதே என்று கேட்டதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் வி. தனஞ்செய குமார் கூறியதாவது,
எதியூரப்பா தனது பதவியை ஒருபோதும் ராஜினாமா செய்யமாட்டார். அவருக்கும் சுரங்க செயல்பாட்டிற்கும் எந்த நேரடித் தொடர்பும் கிடையாது. அன்மையில் டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் தொடர்பான லோக் அயுக்தா அறி்க்கையை காங்கிரஸ் நிராகரித்தது. அதுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? என்றார்.












Click it and Unblock the Notifications