'சமச்சீர் கல்வியில் நாத்தீகத்தைப் புகுத்திய திமுக'-பாஜக
மானாமதுரை: சமச்சீர் கல்வித் திட்டத்தில் கடந்த திமுக அரசு நாத்தீகத்தை புகுத்தியுள்ளது என்று பா.ஜ.க. மாநில துணை தலைவர் எச். ராஜா குற்றம் சாட்டினார்.
மானாமதுரையில் இதுகுறித்து ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் தி.மு.க. அரசு அதன் சின்னத்தையும், நாத்திகத்தை புகுத்தியுள்ளது. இதை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்.
மத்தியில் பா.ஜ.க. அரசு இருந்த போது, பல லட்சம் பேருக்கு காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், தற்போதுள்ள காங்கிரஸ் அரசு மானிய விலையில் ஒரு வடத்திற்கு வெறும் 4 சிலிண்டர்கள் மட்டுமே தர உள்ளதாக தெரிய வருகிறது. இதை கண்டித்து, மக்கள் போராடவேண்டும்.
மத்திய அரசு 241 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளதாக கூறுகிறது. உற்பத்தி அதிகரித்தால், உணவு பணவீக்கம் குறைய வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல் உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது.இதற்கு ஆன்லைன் வர்த்தகமே காரணம். எனவே, மத்திய அரசு உடனே ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications