கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழு கூட்டம்... முக்கிய முடிவுகள் குறித்து தீவிர விவாதம்!!

இந்தக் கூட்டத்துக்கு வருவாரோ மாட்டாரோ என்று பலரும் சந்தேகம் கிளப்பிய மத்திய அமைச்சர் முக அழகிரி தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்றார்.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில், முன்னாள் துணை முதல்வரும் கட்சியின் பொருளாளருமான முக ஸ்டாலின், 2 ஜி அலைவரிசை விவகாரத்தில் சிக்கி பதவியிழந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பேராசிரியர் அன்பழகன் உள்பட அனைத்து தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கருணாநிதி - முக அழகிரி பேச்சு
முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து ரயில் மூலம் கோவை வந்துவிட்ட திமுக தலைவர் கருணாநிதி, ஓட்டலில் தங்கியிருந்தார். அவரை முக அழகிரி தனது ஆதரவாளர்கள் மூர்த்தி, மூக்கையா ஆகியோருடன் போய் சந்தித்தார்.
பிற்பகல் வரை கட்சி விவகாரம் குறித்து அவர்கள் கடுமையாக விவாதித்ததாகத் தெரிகிறது.
ஆனால் மாலை 4 மணிக்கு கூட்டம் தொடங்கியபோது, அனைவரும் அரங்குக்கு வந்துவிட்டனர். ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படுமா, அழகிரிக்கு வேறு புதிய கட்சிப் பதவி தரப்படுமா போன்ற கேள்விகளுக்கு இந்த கூட்டத்தில் விடை கிடைத்துவிடும்.
காங்கிரஸ் கூட்டணி, அமைச்சரவையில் பங்கேற்பு குறித்து விவாதம்
மத்திய அரசில் அங்கம் வகிப்பதில் எழுந்துள்ள நெருடல்களைத் தொடர்ந்து, மத்திய அரசில் தொடர்வதா வேண்டாமா என்பது குறித்து திமுக செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இருப்பினும், மத்திய அரசில், அமைச்சரவையில் தொடரும் பட்சத்தில், மத்திய அரசில் இருந்து விலகிய 2 அமைச்சர்களுக்குப் பதிலாக, வேறு 2 பேரை அமைச்சரவைக்குப் பரிந்துரை செய்யலாமா என்பது குறித்தும் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது குறித்தும் கடும் விவாதம் எழுந்தது. இதுகுறித்த இறுதி முடிவு கட்சித் தலைவர் கருணாநிதி வசம் விடப்பட்டது.
மேலும் தமிழக அரசின் வாட் வரி உயர்வு குறித்தும், சமச்சீர் கல்வி விவகாரத்தில் திமுக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வழக்கறிஞர் அணி
செயற்குழு கூடும் முன் அதே அரங்கில் கூடிய திமுக சட்டத்துறை பிரிவின் கூட்டத்தில், அதிமுக அரசு திமுகவின் அனைத்துப் பொறுப்பில் உள்ளவர்கள் மீதும் பழிவாங்கும் நோக்கோடு வழக்குகளைப் பதிவு செய்து வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு பொய்வழக்குகள் போடும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநில மனித உரிமை ஆணையம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரிடம் முறையீடு செய்வது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
-
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
தாம்பரம் ட்விஸ்ட்.. ஸ்டாலின் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. எதிர்ப்பை ஆதரவாக்கிய திமுகவின் தேர்தல் வித்தை! -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
விஜய் தேர்தலில் தோல்வி அடைந்த பின்.. அந்த விஷயம் நடக்கும் பாருங்க.. அடித்து சொல்லும் பியூஷ் கோயல்! -
திருமாவளவனிடம் போனில் பேசிய ஸ்டாலின்.. காட்டுமன்னார்கோவில் வேட்பாளர் மாற்றத்துக்குப் பின்னணி என்ன? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
“எடப்பாடி பழனிசாமி இரட்டை விரலை காட்டுவது ஏன் தெரியுமா?” - உதயநிதி ஸ்டாலின் சொன்ன மேட்டர்! -
“படத்தில் விஜயகாந்துக்கு வாக்கு கேட்டேன்.. இன்று அவரது மகனுக்கு ஓட்டு கேட்கிறேன்" - ஸ்டாலின் பேச்சு -
“நான் பேசியதாக பரப்பப்பட்ட ஆடியோ AI மூலம் பொய்யாக உருவாக்கப்பட்டது” - ஆ.ராசா விளக்கம்! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை நெருங்கி வந்த போலீசார்.. திடீரென ரெய்டு! ராமநாதபுரத்தில் சலசலப்பு












Click it and Unblock the Notifications